×

திருப்பதி கோயிலில் ரூ.3.09 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது அதிகளவு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நாள்தோறும் வருகின்றனர். அதன்படி நேற்று, ஏழுமலையானை தரிசனம் செய்த பக்தர்களில் 24,158 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை நேற்று மாலை கணக்கிடப்பட்டது. இதில் ரூ.3.09 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 4 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post திருப்பதி கோயிலில் ரூ.3.09 கோடி காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupati Temple ,Thirumalai ,Swami ,Tirupati Eeumalayan temple ,Seven Mountain ,
× RELATED திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்...